அரியர் தேர்ச்சி விவகாரம்: AICTE விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் காலவரையற்ற மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அரியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழக அரசின் தேர்ச்சி உத்தரவை ரத்து செய்ய கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது என தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதேபோல தமிழக அரசின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என சில மாணவர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் (AICTE) விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அதிரடியாக தெரிவித்தனர்.

மேலும், ஏற்கனவே தனியார் ஆன்லைனில் உணவு விநியோக நிறுவனங்களில் பெருமளவு பொறியியல் படித்தவர்களே பணியாற்றுவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

அதோடு, அரியர் மாணவர்கள் தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி பெற முடியும் என எதிர்பார்க்கலாம் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *