இந்தியா­வி­லேயே சிறைக் கைதி­களுக்காக சிறப்பு கோவிட் மய்யம் தமிழகத்தில் திறக்கப்பட்டது

இந்தியா­வி­லேயே கைதிக­ளுக்­காக தமிழ­கத்­தில்தான் சிறைச்­சா­லையில் சிறப்பு கோவிட் பரா­மரிப்பு மையம் திறக்­கப்­பட்­டுள்­ளது என்று அமைச்சர் சி.விஜயபாஸ்­கர் கூறினார். 144 சிறைக்கைதி­கள் கொரோ­னா­வினால் பாதிக்­கப்­பட்ட நிலையில் 99 கைதி­கள் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்­தார்.

கொரோ­னா­வால் பாதிக்­கப்­ப­டும் கைதி­க­ளுக்கு சிகிச்சை அளிக்க ஆண்­களுக்­கான 3 வார்­டு­கள், பெண்­க￾ளுக்கு 1 வார்டு என மொத்­தம் 50 படுக்கை­கள் கொண்ட கொரோனா பரா­மரிப்பு மையம் தண்­டனை பிரிவில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த மையத்­தினை சட்டத்­துறை அமைச்­சர் சி.வி.சண்மு­கம், சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜயபாஸ்­கர் ஆகி­யோர் திறந்து வைத்­தனர்.

பின்­னர்செய்தியா­ளர்­களி­டம் சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜயபாஸ்கர் கூறிய­தா­வது:
தமிழ­கத்­தில் கொரோனா சிகிச்­சைக்­காக இதுவரை புதி­ய­தாக 1 லட்சத்து 29 ஆயிரத்து 122 படுக்கை வசதி­கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ­கத்­தில் 1, 643 கோவிட் பரா­மரிப்பு மையங்கள் செயல்­ப­டுகின்­றன. சென்­னை­யில் மட்­டும் 54 கோவிட் பரா­மரிப்பு மையங்கள் செயல்படுகின்­றன. இந்­தியா­வி­லேயே முதல்மு­றையாககைதி­க­ளுக்­காக புழல் சிறையில் சிறப்பு கோவிட் பரா­மரிப்பு மையம் திறக்கப்­பட்­டுள்­ளது.

புழல் சிறையில் ஆய்­வகம், மருந்­த­கம், 108 ஆம்பு­லன்ஸ் என அனைத்து வசதி­க­ளும் செய்துதரப்­பட்­டுள்­ளது. 24 மணி நேரமும் மருத்­துவர்­கள், செவிலியர்­கள் சுழற்சி முறை­யில் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்­தார். புழல் சிறையில் 114 கைதி­கள் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட நிலையில், 99 பேர் இதுவரை குணம­டைந்துள்­ள­னர்.

இவ்­வாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்­சர் விஜயபாஸ்­கர் தெரிவித்­தார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *